தமிழகத்தில் தொடரும் பதற்றம்... மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்..... மெரினாவில் போலீசார் பாதுகாப்பு....!

0 2957

மணிப்பூர் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை மெரினாவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியானதால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று மாலை மெரினாவில் மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து சிலர் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதன் தொடர்ச்சியாக மெரினாவில் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் 40 போலீசார் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments