சென்னை காசிமேட்டில் பட்டப்பகலில் குடத்தில் மது பாட்டில்களை வைத்து விற்கும் பெண்.. !!

0 4996

சென்னை காசிமேட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பெண் ஒருவர் குடத்தில் மது பாட்டில்களை வைத்து பட்டப்பகலில் விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பவர் குப்பம் ஏ பிளாக் பகுதியில் சர்வ சாதாரணமாக இந்த மது வியாபாரம் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக்கில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர் என்று கூறப்படுகிறது.

24 மணி நேரமும் இங்கு மது விற்பனை நடைபெறுவதாகக் கூறும் அப்பகுதி குடியிருப்புவாசிகள், குடித்துவிட்டு போதை ஆசாமிகள் அட்டகாசத்தில் ஈடுபடுக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments