ஜெய்ப்பூரில் அரை மணி நேரத்தில் 3 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்.. சாலைகளில் மக்கள் தஞ்சம்.. !!

0 1477

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை அரை மணி நேரத்தில் மூன்று நில நடுக்கங்கள் உணரப்பட்டன. 3.4 ரிக்டர் அளவிலான சமீபத்திய நிலநடுக்கம் அதிகாலை 4.25 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. தொடர்ந்து அரை மணி நேரத்தில் 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments