பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவி 3 நாட்களுக்குப் பிறகு கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்பு..!!

0 8311

சென்னை ஆலந்தூர் அருகே பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் 3 நாட்களுக்கு பிறகு கல்குவாரி குட்டையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளாகரத்தைச் சேர்ந்த 15வயது மாணவி நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில்  10வது வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17ந்தேதி காலையில் சைக்கிளில் பள்ளிக்கு செல்வதாக கூறிய மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 20ந்தேதி நங்கநல்லூர் பர்மா காலனியில் உள்ள தலைக்கனஞ்சேரி கல்குவாரி குட்டையில் காணாமல் போன மாணவியின் உடல் இருப்பது தெரிய வந்ததை அடுத்து சடலம் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments