வெளிநாட்டு காற்றாலை நிறுவன பொது மேலாளரை மிரட்டிய விவகாரம் : பாஜக பொருளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு

0 1918

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வெளிநாட்டு காற்றாலை நிறுவன பொது மேலாளரை மிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பாஜக மாவட்ட பொருளாளர் உட்பட 3பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடலிவிளையில் பிரேசிலைச் சேர்ந்த வெக்  என்ற நிறுவனம் அமைத்துள்ள காற்றாலை  மின் உற்பத்தி நிறுவனத்தில் பொதுமேலாளராக கார்லஸ் ஹெர்பெட்பாராஸ் பணி புரிந்து வருகின்றார்.

இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நெல்லை மாவட்ட பாஜக பொருளாளர் பாலகிருஷ்ணன் சில பணிகளை செய்து வந்துள்ளார். இதில் சரியாக பணிகளை செய்யாததால் அவரது ஒப்பந்தத்தை பிரேசில் நாட்டு நிறுவனம் ரத்து செய்துள்ளது. இதனால்ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் அவரது மகன் பாலாஜி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அடியாட்கள் தாக்கியதாக கார்லஸ் பணகுடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments