பால் கொள்முதல் விலையை அதிகரித்தால், விற்பனை விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் உள்ளது - அமைச்சர் மனோ தங்கராஜ்

0 2487

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டுமானால், விற்பனை விலையை அதிகரிக்க வேண்டிய சூழல் நிலவுவதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் பேட்டியளித்த அவர், ஆவின் பால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால், கொள்முதல் விலையை அதிகரிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும் இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதத்தில் நாள்தோறும் 4 லட்சம் லிட்டர் அளவுக்கு பால் கொள்முதல் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஆவின் பால் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக வெளியான தகவல் தவறானது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments