சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்த பெண் வெட்டிக் கொலை

0 2292

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்த பெண் வெட்டிக் கொல்லப்பட்டார்.

மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜி என்ற ராஜேஷ்வரி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்றிரவு வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கத்தி மற்றும் அரிவாளால் ராஜேஷ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜேஸ்வரி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ராஜேஸ்வரிக்கு மொத்தம் 4 கணவர்கள் என்பதும், அவர்களில் 3 பேர் இறந்து விட்டதாகவும், கடைசியாக புவனேஸ் என்பவருடன் வசித்து வந்ததும் தெரிய வந்தது. கொலைக்கான காரணம் பற்றி பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாகவும், அதனால் 5 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments