மகளிர் உரிமைத் தொகை : சென்னையில் நாளை முதல் வீடு தேடிச் சென்று டோக்கன் வழங்கப்படும் - மாநகராட்சி ஆணையர்

0 1396

சென்னையில் நாளை முதல் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு தேடிச் சென்று வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ரிப்பன் மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், சென்னையில் 2 கட்டமாக டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளதாகவும் முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் தேதி நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

வங்கிக் கணக்கு இல்லாத பெண்களுக்கு முகாம்களிலேயே வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments