பைக் திருடிய களைப்பில் படுத்து தூங்கிய திருடர்கள்.. அலேக்காக கைது செய்த போலீஸ்...!

0 4752

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பைக் திருடிய களைப்பில் படுத்து தூங்கிய திருடர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாய்மேடு பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் அதிகாலையில் 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சந்தேகத்திற்கு இடமாக படுத்து நன்றாக தூங்கியுள்ளனர்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மூவரையும் பிடித்து விசாரணை செய்ததில் வேதாரண்யம் பகுதியில் பல்சர் பைக்கை திருடிக் கொண்டு வந்து தூங்கியது தெரிய வந்தது.

மேலும் அவர்கள் அளித்த தகவலின் பேரில் 2 சிறுவர்கள் உள்பட 6பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பல்சர் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments