தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.. பேருந்தில் சென்றவர்கள் உயிர் தப்பினர்

0 3947
தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.. பேருந்தில் சென்றவர்கள் உயிர் தப்பினர்

ஒடிசா மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் சென்னை- கொல்கத்தா இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரசூல்பூர் என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலசோரில் இருந்து புவனேஸ்வர் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது.

பேருந்து சென்ற சில நொடிகளில் பாலம் இடிந்து விழுந்ததால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் கொல்கத்தா-சென்னை நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments