பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டை.. காலை வரை நீடித்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. !!

0 1265

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சிந்தாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களோடு இந்திய ராணுவ சிறப்புப் படைகள், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் காஷ்மீர் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படை மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்.

நள்ளிரவு 11.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கிச் சண்டை காலை வரை நீடித்தது. இதில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்கள் வெளிநாட்டு தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும், அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments