பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீ.. சர்வதேச உதவியை நாடிய கனடா.. !!

0 925

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க ஆயுதப் படைகள் மற்றும் சர்வதேச தீயணைப்பு வீரர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

கனடா இந்த ஆண்டு மிகவும் மோசமான காட்டுத்தீ பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஆண்டு தொடங்கி தற்போது வரை 1 கோடி ஹெக்டர் காட்டுப்பகுதி தீக்கிரையாகி உள்ளது. இதில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் 12 லட்சம் ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

மழை பொழிவு இல்லாமல் வறண்டுபோயுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், கனடா வீரர்கள், வெளிநாட்டு வீரர்களும் உட்பட சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

இது போதாது என்று மேலும் ஆயிரம் சர்வதேச தீயணைப்பு வீரர்களின் உதவியை பிரிட்டிஷ் கொலம்பியா அதிகாரிகள் நாடியுள்ளனர்.

கனடா முழுவதும், அமெரிக்கா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 367 தீயணைப்பு வீரர்கள் கனடா தீயணைப்புப் பணியாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments