ஆம்பூர் அருகே சாலை தடுப்பில் மோதி ஆட்டோ கவிழ்ந்ததில் 8 மாணவர்கள் காயம்

0 1668

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

சான்றோர் குப்பம் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிய லாரி, முன்னால் சென்ற ஆட்டோ மீதும் இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ  நிலைதடுமாறி சாலை சென்டர் மீடியன் மீது  மோதி கவிழ்ந்தது.

இதில் காயமடைந்த பள்ளி மாணவர்கள் 8 பேர்  இருசக்கர வாகன ஓட்டி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments