எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு தள்ளுபடி

0 2715

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறையையும் தம் வசம் வைத்திருந்தார். அப்போது டெண்டர் கோரியதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்ததாகக் கூறி எடப்பாடி பழனிசாமி, அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மீது 2018-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவில்லை எனவும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ். பாரதி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல கட்டங்களாக விசாரணை நடத்தி தீர்ப்பளித்துள்ளார். அதில், வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடு காணமுடியாது என்று தெரிவித்துள்ள நீதிபதி, ஆட்சி மாற்றங்களின் போது நீதிமன்றங்கள் விளையாட்டு மைதானங்களாக பயன்படுத்தப் படுவதாக கூறியுள்ளார்.

சாதாரண ஏழை வழக்காடிகளுக்கான நீதிமன்ற நேரம் அரசியல் பிரச்சினை சார்ந்த வழக்குகளால் விழுங்கப்படுவதாகவும் தெரிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments