டெல்லி நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

0 2109

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இன்று அதிகாலை போபாலில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், குர்வாய் கெதோரா நிலையம் அருகே சென்றுக் கொண்டிருந்த போது C-12 பெட்டியின் அடிப்பகுதியில் திடீரென தீ பற்றியது.

உடனடியாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதும் பயணிகள் கீழே இறங்கிய நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் இருந்த பேட்டரியில் தீ பற்றியதாகவும், தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆய்வுக்கு பின் ரயில் புறப்பட்டு செல்லும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments