வீடுகளில் 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் கட்டணமா? - மின்வாரியம் விளக்கம்

0 6214

வீடுகளில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் வர்த்தக பிரிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என சமுகவலைத்தளங்களில் பரவிய தகவல் உண்மையில்லை என்று மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது வீடுகளுக்கு வசூலிக்கப்பட்டு வரும் மின்கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லையெனவும் தமிழகத்தில் 3,600 யூனிட்டுக்கு மேல் 4 சதவீதம் பேர் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100 யூனிட் வரை எந்தவித கட்டணமும் இல்லை என்ற சலுகை தொடர்வதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments