மருத்துவமனைக்குள் இளம்பெண்ணை ஓடஓட விரட்டி கத்தியால் 12 முறை குத்தி கொலை செய்த இளைஞரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்..!
கேரளாவில் மருத்துவமனைக்குள் இளம்பெண்ணை ஓடஓட விரட்டி கத்தியால் 12 முறை குத்தி கொலை செய்தவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் லிஜியா. இவரது கணவர் வெளிநாட்டில் வேலைப் பார்த்து வரும் நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் மகேஷை விட்டுப் பிரிய லிஜியா முடிவெடுத்ததாகவும் அதற்கு அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது தாயாரை, அங்கமாலி பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துவிட்டு லிஜியா உடனிருந்துள்ளர். அங்குச் சென்ற மகேஷ்க்கும், லிஜியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லிஜியாவை மகேஷ் தாக்கியபோது மடக்கிப் பிடிக்க முயன்ற அங்கிருந்தவர்களையும் அவர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
Comments