திடீரென சரத்பவாரின் இல்லத்திற்கு சென்ற அஜித் பவார்.. பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்

0 2258
திடீரென சரத்பவாரின் இல்லத்திற்கு சென்ற அஜித் பவார்.. பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்

மகாராஷ்ட்ரா அமைச்சரவை விரிவாக்கத்தையடுத்து துணை முதலமைச்சர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் இல்லத்திற்கு சென்றதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் விலகிய பின்னர் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு முதன்முறை அஜித் பவார் சரத்பவாரின் இல்லம் சென்றுள்ளார்.

அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பிய சரத்பவாரின் மனைவி உடல் நலம் பற்றி விசாரிக்கவே அஜித் பவார் சென்றதாக அவருடைய கட்சியினர் தெரிவித்தனர்.

நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்குப் பிறகு அஜித்பவாருக்கும் அவருடயை ஆதரவு எம்.எல்.ஏக்கள் 8 பேருக்கும் நிதித்துறை உள்ளிட்ட முக்கியமான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments