ரூ.60க்கு விற்பனை.. அமுதம் அங்காடியில் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த தக்காளி..!

0 2172

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடியில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டதால் ஒரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது.

தக்காளி விலை உயர்வினைத் தொடர்ந்து சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறைந்த அளவே தக்காளி கையிருப்பில் இருந்ததால் முதலில் வந்தவர்களுக்கு ஒரு கிலோவும் பிறகு வந்தவர்களுக்கு அரை கிலோவும் வழங்கப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். விலை உயர்வால் தக்காளி பயன்பாட்டை குறைத்திருப்பதாக தெரிவித்துள்ள மக்கள், விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments