விசாரணைக்கு சென்று வந்த ரவுடி உயிரிழப்பு.. கணவர் உயிரிழக்க போலீசார் காரணம் என மனைவி புகார்..!!

0 1480

சென்னை எம்ஜிஆர் நகரில் திருட்டு தொடர்பான விசாரணைக்கு சென்று வந்த ரவுடி உயிரிழந்த சம்பவத்துக்கு காவல்துறையே காரணம் என அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பி எம் தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஸ்ரீதர், இவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் குடும்பத்தினருடன் எம்ஜிஆர் நகருக்கு குடி பெயரந்தார். அங்கு அவர் வசிக்கும் குடியிருப்பில் நகை திருட்டு போனது தொடர்பான விசாரணைக்கு மனைவியுடன் சென்று வீடு திரும்பும் வழியில் ,நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று ஊசிபோட்டுள்ளார்.

பின்னர்வீட்டுக்கு வந்த ஸ்ரீதருக்கு அதிகம் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது அவரது உடல் ஆய்வறிக்கை வந்த பின்னரே மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என கூறியுள்ள அதிகாரிகள், காவலர்கள் தவறு செய்து இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments