கடன் சுமையால் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்..!!

0 20956

நாமக்கல் ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் அதிகப்படியான கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்.

ராசிபுரம் பொம்மிதெரு பகுதியை சேர்ந்த அருண்லால், கடை வீதியில் 20 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி தேவிபிரியா ராசிபுரம் நகராட்சி 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், காலை வெகுநேரமாக வீட்டு கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அருண்லாலும், தேவிபிரியாவும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தனர்.

தகவலறிந்த ராசிபுரம் போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டாவது மகள் மவுனிகா படுக்கையறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை அதிகமானதால் அருண்லால் மனவேதனையுடன் இருந்து வந்ததாகவும், அவரது இளைய மகள் மவுனிகாவுக்கு உணவில் விஷம் கலந்து உணவு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments