சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ள மனித உருவ ரோபோ வடிவமைப்பு.. !!

0 2717

சீனாவில் முதியோர்களை கவனித்துக்கொள்ளும் வகையில் மனித உருவ ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 2035ம் ஆண்டுக்குள் 60 வயதை கடந்தவர்களின் எண்ணிக்கை 28 கோடியிலிருந்து 40 கோடிக்கும் அதிகமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷாங்காயை தலைமையிடமாகக் கொண்ட ஃபோரியர் இன்டலிஜென்ஸ் நிறுவனம் இந்த மனித உருவ ரோபோவை வடிவமைத்துள்ளது.

மருத்துவ சேவையை வழங்குவது, நோயாளிகளை படுக்கையில் இருந்து சக்கர நாற்காலிக்கு மாற்றுவது, பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளை செய்யும் வகையிலான ரோபோவே தனது குறிக்கோள் என்று ஃபோரியர் இன்டலிஜென்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென் கோ தெரிவித்துள்ளார். தற்போது ஆராய்ச்சி நிலையில் இருக்கும் இந்த ரோபோ அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments