எதிர் வீட்டுக்காரரை தாக்கச் சென்ற போது தடுக்க முயன்ற தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் கைது..!!

0 2529

சென்னையில் மது போதையில் எதிர் வீட்டுக்காரரை கத்தியால் வெட்டச் சென்ற நபர், தடுக்க முயன்ற தனது தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குமார் குடிபோதையில் தெருவுக்குள் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

இதனை அவரது எதிர்வீட்டைச் சேர்ந்த வேலன் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார், வீட்டுக்குள் சென்று சிறிய கத்தி ஒன்றை எடுத்து வந்து வேலனை தாக்குவதற்காகச் சென்றதாக சொல்லப்படுகிறது.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த குமாரின் தந்தை வீரமுத்து ஓடிச் சென்று மகனைத் தடுக்க முயன்றுள்ளார். அப்போது இருவருக்கும் நடந்த போராட்டத்தில், குமார் வீரமுத்துவின் கழுத்தை அறுத்தார். இதில் வீரமுத்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து குமார் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments