வாடகை வீட்டில் இருந்து கொண்டு இரண்டு மாற்றுத் திறனாளிப் பிள்ளைகளை பராமரிக்க முடியவில்லை.. வீடு வழங்க கூலித் தொழிலாளி கோரிக்கை

0 1576

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாடகை வீட்டில் இருந்து கொண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை உரிய முறையில் பராமரிக்க முடியாததால் தமிழக அரசு இலவச வீடு வழங்க வேண்டும் என கூலி தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாலாட்டின்புதூர் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் -  முத்து மாடத்தி தம்பதிக்கு 23 வயதில் ராஜ்குமார் என்ற மகனும், 20 வயதில் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

லோடு வண்டியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை அழைத்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற சண்முகவேல், இலவச வீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments