இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 20ம் தேதி டெல்லி வருகிறார்..!!

0 1204

இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங்கே வரும் 20ம் தேதி டெல்லி வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாட்ரா ஓரிரு நாட்களில் கொழும்பு செல்ல உள்ளார்.

கடந்த ஆண்டு அதிபராக பதவியேற்ற ரணில் விக்ரம்சிங்கே அதன்பின்னர் முதன்முறையாக இந்தியா வருகிறார். ஐ.எம்.எப். கடன் மறுசீரமைப்புத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை இந்த சந்திப்பின் போது மோடியுடன் விக்ரம்சிங்கே விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments