துருக்கி பயணத்தின் போது உக்ரைன் வீரர்களை அழைத்து வந்த ஜெலென்ஸ்கி வீரர்கள் நாட்டின் ஹீரோக்கள் என பாராட்டு...!

0 1025

துருக்கிக்கு சென்று நாடு திரும்பிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அந்நாட்டில் இருந்த முன்னாள் உக்ரைன் போர் தளபதிகள் 5 பேரை தன்னுடன் அழைத்து வந்தார்.

கடந்தாண்டு மரியுபோலை ரஷ்ய படைகள் கைப்பற்றிய போது, அங்கு போரிட்ட வீரர்களும் போர் தளபதிகளும் சரணடைந்தனர்.

துருக்கி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கைதிகள் பரிமாற்றத்தின் கீழ் சிலரை விடுவித்த ரஷ்யா, போர் முடியும் வரை, போர் தளபதிகள் துருக்கியில் இருக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், துருக்கிக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய, ஜெலென்ஸ்கி, தளபதிகளுடன் நாடு திரும்பினார்.

உக்ரைனின் லிவிவ் நகரில் வீரர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. அங்கு பேசிய ஜெலென்ஸ்கி, அவர்களை நாட்டின் ஹீரோக்கள் என்று பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments