போலியான பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி சைபர் குற்றங்களில் ஈடுபட்ட கும்பல் கைது

0 1523

போலியான பெயர்களில் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி சைபர் குற்றங்களில் ஈடுபட்ட கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

போலியான 100 வங்கிக் கணக்குகளில் சுமார் 2 கோடி ரூபாய் போடப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஏழைகளுக்கு பணம் கொடுத்து அவர்கள் பெயரில் கணக்கு தொடங்கிய இந்த கும்பல் பின்னர் பான் கார்டு எண்ணைப் பெற்று அந்த கணக்கை சைபர் மோசடி கும்பல்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனைசெய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

குரேஷி என்பவர் தமது கணக்கில் இருந்து 62 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இவ்வழக்கில் பெண் சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments