''பொது பிரச்சனை என வரும்போது மக்கள் பக்கம் அதிமுக நிற்கும்...'' - எஸ்.பி.வேலுமணி

0 1481

காவிரி பிரச்சனையின் போது அ.தி.மு.க. நாடாளுமன்றத்தை 23 நாட்கள் முடக்கியதைப் போல தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கோவையில் பேட்டியளித்த அவர், பொது பிரச்சனை எதுவாக இருந்தாலும் அ.தி.மு.க. மக்கள் பக்கம் நிற்கும் என்றார்.

அ.தி.மு.க.வில் தன்னைப் போன்ற, எடப்பாடி பழனிசாமி போன்ற சாதாரண தொண்டர்கள் கூட மிகப்பெரிய பொறுப்பிற்கு வரமுடியும் என்று அவர் கூறினார். கட்சி உறுப்பினர்களை ஒரு குடும்பமாக அரவனைத்து செல்வது அ.தி.மு.க. தான் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து அவர் வரவேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments