பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 சிறுவர்கள் உயிரிழப்பு

0 1255

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 குழந்தைகள் உயிரிழந்தனர்.

அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஷங்லா மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கனமழை பெய்தது. இந்நிலையில் மணற்பாங்கான பகுதிக்கு அருகில் 12 முதல் 15 வயது மதிக்கத்தக்க 15 சிறுவர்கள் ஆடுகளம் அமைத்து கிரிக்கெட் விளையாடி வந்துள்ளனர்.

அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிறுவர்கள் சிக்கியுள்ளனர். இதையடுத்து உள்ளூர் மீட்புக் குழுக்கள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பல மணி நேரப் போராட்டத்திற்குப் பின் 8 சிறுவர்களை சடலங்களாக மீட்டனர்.

அதில் ஒருவர் படுகாயமடைந்து உள்ளதாகவும், ஏனையோர் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments