பிரான்ஸ் நாட்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில் இந்திய விமானப்படை பங்கேற்பு..!

0 1179

பிரெஞ்சுப் புரட்சியின் நினைவாக ஜூலை 14ம் தேதி கொண்டாடப்படும் Bastille Day நிகழ்ச்சியில் 4 இந்திய ரபேல் விமானங்களும் இதர போர் விமானங்களும் அணிவகுப்பில் கலந்துக் கொள்ள உள்ளன.

இதற்கான இந்திய விமானப்படையின் 72 பேர் கொண்ட தனிக்குழு பாரீசுக்குப் புறப்பட்டுச் சென்றது. ஹெலிகாப்டர் அணிவகுப்புக்கு ஹெலிகாப்டர் பைலட்டான சிந்து ரெட்டி என்பவர் தலைமை வகிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இரண்டு உலகப்போர்களின் போது இந்திய போர் விமானங்கள் பிரான்ஸ் வானத்தில் பறந்ததை நினைவுபடுத்தும் விதமாக இந்திய விமானப்படை பிரான்ஸ் விமானப்படையுடன் வான் சாகசத்தில் ஈடுபட உள்ளது. ரபேல் உள்பட ஏராளமான விமானங்களை பிரான்சிடமிருந்து இந்தியா வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments