நைஜீரிய சைபர் கிரைம் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

0 3600

டெல்லியில் இருந்து இயங்கும் நைஜீரிய சைபர் கிரைம் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த இளம்பெண் அஸ்வினி, படிப்பை முடித்துவிட்டு பியூட்டி பார்லரில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில் இணையம் மூலம் திருமண ஆசை காட்டிய நைஜீரிய இளைஞருக்கு மறுப்பு தெரிவித்ததால், சுங்கத்துறைக்கு பார்சல் அனுப்பி இருப்பதாகவும் அதனை எடுக்காவிட்டால் கைது செய்து விடுவார்கள் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.

அச்சமடைந்த அஸ்வினி 25 ஆயிரம் ரூபாய் அனுப்பிய நிலையில் மேலும் 45 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நைஜீரிய கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments