ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் உட்கட்சி பூசல் பற்றி மேலிடம் ஆலோசனை

0 1480

டிசம்பரில் தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தான் அம்மாநிலத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண டெல்லியில் சமரச கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூ கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சச்சின் பைலட் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். காணொளி வாயிலாக அசோக் கெலாட் கலந்து கொண்டார். அப்போது, கோஷ்டி பூசல் காரணமாக ராஜஸ்தானில் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்று கார்கே கவலை தெரிவித்தார்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க இரு தரப்பினரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேச வேண்டாம் என்றும் சச்சின் பைலட்டுக்கு மூத்த தலைவர்கள் அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments