நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பி. ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

0 3551

தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யும் வகையில் உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தல் பிரமாண பத்திரத்தில் சொத்து மற்றும் கடன் விபரங்களை மறைத்து விட்டதாகவும், எனவே அவரது வெற்றியை செல்லாததாக அறிவிக்கக் கோரியும் வாக்காளர் மிலானி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். இதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி சுந்தர், ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments