கோவையில் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழப்பு

0 4534

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

சுகுணாபுரத்தில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் போது திடீரென மாலையில் அந்த கட்டிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காம்பவுண்டின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கற்கள் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments