ஆஸ்திரேலியாவில் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல்

0 1588

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்தியத் தூதர் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார் உள்ளிட்டோருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த நிஜார் என்பவரின் படுகொலைக்கு இவர்கள்தான் காரணம் என்ற சுவரொட்டிகள் இந்த இரண்டு அதிகாரிகளுடன் படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளன.

கனடாவில் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவிலும் தங்கள் இருப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி ஆஸ்திரேலிய அரசை இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments