சொகுசு பங்களாவில் செயற்கை ஏரி அமைத்ததற்காக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு 27 கோடி ரூபாய் அபராதம்..!

0 1711

அரசிடம் உரிய அனுமதி பெறாமல் சொகுசு பங்களாவில் செயற்கை ஏரி அமைத்ததற்காக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு 27 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஹியோ டி ஜெனய்ரோ மாநிலத்தில், கடற்கரை அருகே, இரண்டரை ஏக்கர் பரப்பளவில், ஹெலிபேடு, ஸ்பா, ஜிம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கூடிய சொகுசு பங்களாவை 7 ஆண்டுகளுக்கு முன் நெய்மர் வாங்கினார்.

சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறாமல் செயற்கை ஏரி ஒன்றை நெய்மர் அங்கு அமைத்துவருவதாகவும், ஆற்று நீரை ஏரிக்கு மடைமாற்றிவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

2 வாரங்களுக்கு முன் அங்கு சோதனையிட்ட அதிகாரிகள் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதில் நெய்மருக்கு 27 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments