சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலத்தை மீட்டது சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

0 5041

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 114 கிரவுண்ட் நிலத்தை தமிழ்நாடு அரசு மீட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள 114 கிரவுண்ட் மற்றும் 534 சதுர அடி பரப்பளவுள்ள அந்த நிலத்தை தனியார் நிலமாக அங்கீகரித்து, தோட்டக்கலை சங்கத்துக்கு பட்டா வழங்கி 2011-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை ரத்து செய்து கடந்த ஜூன் 5-ஆம் தேதி நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து, விதிகளை மீறி, அதிகார துஷ்பிரயோகம் செய்து இடத்தை அரசு எடுத்துக் கொண்டதாகக் கூறி தோட்டக்கலை சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதற்கு அரசு தாக்கல் செய்த பதிலில், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததன் அடிப்படையில் தான் குறிப்பிட்ட இடத்தை அரசு மீட்டதாகவும், நில நிர்வாக ஆணையருக்கு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நிலத்தை அரசு எடுத்தது சரியே எனக் கூறி தோட்டக்கலை சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments