மகாராஷ்டிராவில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை.. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது..!

0 1005

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தானே, புனே உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக கடந்த மாதம் 28ம் தேதி புதிய வழக்கு ஒன்றை அதிகாரிகள் பதிவு செய்தனர். சோதனை நடத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் இருந்து, லேப்டாப்கள் நவீன மின்னணு சாதனங்கள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சமூக அமைதியைக் குலைக்க சமூக ஊடகங்களையும் அந்த நான்கு பேரும் பயன்படுத்தி வந்ததாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments