ரஷ்யாவிடம் இருந்து 37 சதுர கி.மீ பரப்பளவு பகுதியை கைப்பற்றியதாக உக்ரைன் அறிவிப்பு

0 1650

ரஷ்ய படைகளிடம் இருந்து 37 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதியை மீண்டும் கைப்பற்றியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் கன்னா மல்யார், மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்களை கொண்டு நடத்திய எதிர்தாக்குதல் மூலமாக, கடந்த வாரத்தில் 37 சதுர கிலோமீட்டர் நிலத்தை உக்ரைன் படைகள் கைப்பற்றியதாக கூறினார்.

மெலிடோபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் பகுதிகளில் உக்ரைன் படைகள் முன்னேறி இருப்பதாக தெரிவித்த அவர், போரின் முக்கிய பகுதியாக திகழும் பக்முட் நகரில் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருவதாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments