பனி மலையில் சிக்கிய இரண்டு மலையேற்ற வீரர்கள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் கடும் முயற்சியால் மீட்பு

0 1636
பனி மலையில் சிக்கிய இரண்டு மலையேற்ற வீரர்கள் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களின் கடும் முயற்சியால் மீட்பு

ஸ்ரீநகரில் பனிமலையில் சிக்கிய இரண்டு உள்ளூர் மலையேற்ற வீரர்களை இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்டனர்.

தஜிவாஸ் எனப்படும் பனிமலையில் பைசல் வானி மற்றும் ஜீஷான் ஆகிய இரண்டு வீரர்கள் மலையேற்றப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பனிச் சரிவுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்த போதும் அங்கு தரையிறக்க முடியாதபடி எங்கும் பனி கொட்டிக் கிடந்தது.

எனினும் ஒருமணி நேரம் கடுமையான முயற்சிக்குப் பின்னர் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எலும்பு முறிவு மற்றும் காயம் அடைந்திருந்த இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments