கிண்டியில் ஆட்டோ டிரைவர் ஓட, ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி ராபினின் கூட்டாளிகள் 7 பேர் கைது...!

0 10236

சென்னை கிண்டியில் மளிகை கடை ஷட்டரைப் பூட்டி ஆட்டோ டிரைவரை கொலை செய்துவிட்டு தப்பமுயன்ற இருவரை போலீசார் மடக்கிப் பிடித்த காட்சி வெளியாகி உள்ளது.

சென்னை வேளச்சேரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெறி தினேஷ், கடந்த வெள்ளியன்று கிண்டியிலுள்ள மளிகை கடைக்குள் வைத்து கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ஷட்டரை கடை உரிமையாளர் மூடி பூட்டியதால்,உள்ளேயே சிக்கிக்கொண்ட கொலையாளிகள் இருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரபல ரவுடி ராபினின் கூட்டாளியாக இருந்த குணா ஆதம்பாக்கத்தில் தாதாவாக வலம் வர விரும்பியதும், குணாவுக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் தினேஷ் செல்போனில் மிரட்டியதால், ராபின் தனது கூட்டாளிகளை அனுப்பி தினேஷை கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் கொலையாளிகள் இருவர், தினேஷை கொலை செய்த அன்று தான், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி ராபினின் கூட்டாளிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments