மோதுவது போல வந்த மோட்டார் சைக்கிள்கள்... வாய்த் தகராறு கோஷ்டி மோதலாகி இருதரப்பினரும் தாக்குதல்...!

0 2869

திருச்சி உறையூரில் மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறியதில் 10 பேர் காயமடைந்தனர்.

முத்தழகன் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளிலும், சுபான் என்பவர் ஓட்டி வந்த டூவீலரும் எதிரெதிரே மோதுவது போல வந்ததால் முத்தழகன் தனது மனைவியுடன் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனால், இருவருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறவே, இருதரப்பைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியதால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதில், ஒருதரப்பினர் சாலை மறியலில் ஈடுபடவே, அவர்களை போலீஸார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், இருதரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments