தக்காளி, வெள்ளரிக்காய், மிளகாய், இஞ்சிக்கு ஆரத்தி... காய்கறிகள் விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டம்

0 1705
தக்காளி, வெள்ளரிக்காய், மிளகாய், இஞ்சிக்கு ஆரத்தி... காய்கறிகள் விலை உயர்வைக் கண்டித்து நூதனப் போராட்டம்

கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் மதுரா நகரில் விகாஸ் மார்க்கெட்டின் காந்தி சிலையருகே மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தக்காளி, வெள்ளரிக்காய், மிளகாய் இஞ்சி போன்ற காய்கறிகளை தட்டில் அடுக்கி வைத்து அதற்கு பூஜைகள் செய்து ஆரத்தி எடுத்தனர்.ஏழைகளுக்கு தக்காளியும் மிளகாயும் இஞ்சியும் இருந்தால் ஏதோ ஒரு சட்னி அரைத்து உணவுக்கு வைத்து சாப்பிடுவது வழக்கம்.

ஆனால் விலைவாசி உயர்வு இந்த எளிய உரிமையையும் பறித்துவிட்டதாக நூதனப்போராட்டம் நடத்திய பெண் ஒருவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments