ஜூலை 20ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்..!

0 1375

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20ஆம் தேதியன்று தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், மழைக்கால கூட்டத் தொடரின் போது ஆக்கப்பூர்வமாக விவாதங்களில் அனைத்து கட்சியினரும் பங்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதனிடையே, மழைக்கால கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தொடங்கும் என்றும், பாதி கூட்டத் தொடரின் போது புதிய கட்டடத்துக்கு மாற்றப்படும் என்றும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

17 அமர்வுகளாக நடைபெற உள்ள கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி அரசின் அதிகாரம் குறித்த அவசர சட்டம் தொடர்பான மசோதாவும் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments