உக்ரைன் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த புதினுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

0 1782

உக்ரைன் போர் குறித்தும், ரஷ்யாவில் ஏற்பட்ட ஆயுத கலகம் குறித்தும் ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார்.

இதுகுறித்து ரஷ்ய அரசு நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவில் ஆயுதக் கலகம் ஏற்பட்ட நேரத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதின் எடுத்த நடவடிக்கைக்கு மோடி தனது ஆதரவை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்கும் போது, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மோடி வலியுறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் ஜி 20 ஆகியவற்றில் தங்கள் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக ரஷ்யாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments