மணிப்பூரில் தொடர்ந்து கலவரம்.. முதலமைச்சரின் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்த ஆதரவாளர்கள்..!

0 2037

மணிப்பூர் கலவரத்தைத் தொடர்ந்து முதலமைச்சர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தபோதும், அவரது ஆதரவாளர்கள் ராஜினாமா கடிதத்தை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிப்பூரில் இருவேறு பிரிவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்த முதல்வர் பைரன்சிங், கடிதத்தை ஆளுநர் அனுசுயா உகேயிடம் கொடுப்பதற்காக தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார்.

ஆனால் அவரைச் சூழ்ந்து கொண்ட ஆதரவாளர்கள் பைரன் சிங்கின் காருக்கு வழிவிட மறுத்தனர். இதனால் அவர் மீண்டும் வீட்டுக்கே திரும்பும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் சுசிந்ந்ரோ மெய்டி, முதலமைச்சரின் ராஜினாமா கடிதத்தை வாசித்தார். ஆனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் மெய்டியின் கையிலிருந்த கடிதத்தை பறித்து கிழித்து எறிந்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் விரும்பிய முடிவைத் தான் எடுத்திருப்பதாகவும், இக்கட்டான சூழ்நிலையில் தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் பைரன்சிங் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments