கோவாவிலிருந்து ஆந்திராவுக்கு மதுபாட்டில்கள் கடத்திவந்த 3 பெண்கள் கைது

0 1935

கோவாவில் இருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் மது பாட்டில்கள் கடத்தியதாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவாவிலிருந்து புறப்பட்ட லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த அந்த 3 பேர் ஏலூர் மாவட்டம் கைகளூர் ரயில் நிலையத்தில் 24 கைப் பைகளுடன் இறங்கினர்.

இதைக் கண்டு சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில், உள்ளே மொத்தம் 2 ஆயிரத்து 949 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெண்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு நாலரை லட்ச ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments