பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான கருத்து அமைதியை சீர்குலைக்கும்: முதலமைச்சர்

0 1159

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவான பிரதமரின் கருத்து அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் தி.மு.க. நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், பொது சிவில் சட்டத்தின் பெயரால் குழப்பத்தை ஏற்படுத்தி லாபம் காண முயற்சிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.

தான் சிரிக்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்ததாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தான் சிரிக்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற வகையில் அமைச்சர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments