மேட்டூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள ரவுடி வெட்டிக் கொலை

0 3543

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த சிபி என்பவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு புதுசாம்பள்ளி என்ற இடத்தில் சிபி வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கடந்த ஆண்டு கருமலைக் கூடல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கொலை வழக்கில் சிபிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே அந்தக் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க சிபி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments