காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்தால் நியாயவிலைக்கடைகளில் விற்பனை - அமைச்சர் பெரியகருப்பன்

0 1309

தமிழகத்தில் காய்கறி விலை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பண்ணை பசுமை அங்காடிகள் மட்டுமின்றி நியாயவிலைக் கடைகளிலும் குறைந்த விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாகவே தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வந்தது. அது தொடர்பாக தேனாம்பேட்டையிலுள்ள பண்ணை பசுமை அங்காடியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், பசுமை பண்ணை அங்காடிகளில் கொள்முதல் விலைக்கோ அல்லது அதனை விட குறைவாகவோ காய்கறிகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை தயாராக இருப்பதாகக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments